பீலாக்களின் பின்னணி…!

Posted: 14/03/2014 in கட்டுரை
குறிச்சொற்கள்:, , , , , , ,
dir=”ltr”><divநாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. கருத்துக்கணிப்புகளும் சரமாரியாக வரத் தொடங்கிவிட்டன. அவற்றின் உண்மைத்தன்மை பற்றி பாதிக்கப்பட்ட பலரும் கூக்குரல் எழுப்பி வருகின்றனர். பலன் பெறுவோர் மகிழ்ச்சியில் திரிகின்றனர். உண்மையில் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் நடப்பது என்ன?

டிவி நிறுவனங்கள் எதுவும் தாங்களாக முன்னின்று கருத்து கணிப்பு நடத்துவதில்லை; நடத்தப்போவதும் இல்லை. அவர்கள், யாரோ ஒரு ஏஜென்சியினரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுகின்றனர்.
கருத்து கணிப்பு எடுக்கும் ஏஜென்சிகள், எண்ணிக்கையில் மிகக்குறைவு. அவர்களுக்கு தேர்தல் என்பது தீபாவளி பண்டிகையைப்போல. அவர்கள், ஒரே ஒரு டிவிக்கு மட்டும் தங்கள் கணிப்பை விற்பதில்லை. நாட்டில் இருக்கும் அனைத்து டிவிக்கும் சேர்த்தே தங்கள் கணிப்பை விற்கின்றனர். அந்தந்த டிவி நிறுவனங்களின் விருப்பு, வெறுப்பை பொறுத்தே, அவர்களது கணிப்பு இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை.
இவ்வாறு பெறப்படும் கணிப்புகள், டிவிக்களின் டிஆர்பி தேவையை பொறுத்து, மசாலா தடவி, எண்ணெயில் பொரித்து நேயர்களுக்கு படையல் வைக்கப்படுகின்றன.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், கணிப்பு எடுக்கும் யாரும் வீடு வீடாக சென்று மக்களிடம் கருத்து கேட்பதில்லை என்பது தான். அலுவலக அறையில் அமர்ந்தபடி, வெவ்வேறு பெயர்களில் படிவத்தை பூர்த்தி செய்வது போன்ற எளிதான வசதி இருக்கையில் யாராவது அப்படி அலைவார்களா என்ன? இந்த மோசடியைத்தான், ‛கணித்து விட்டோம்’ என்றும், ‛நாடி பிடித்து பார்த்து விட்டோம்’ என்றும், பீலா விட்டுத்திரிகின்றனர், சில டிவி தொகுப்பாளர்கள்.
பிரிட்டன் போன்ற முன்னேறிய நாடுகளில், உண்மையாகவே நடத்தப்பட்ட கருத்து கணிப்புகள் கூட பொய்த்தது உண்டு. ‛தோல்வி அடைவார்’ என்று அனைத்து கணிப்புகளும் கூறிய ஜான் மேஜர் ஆட்சியை பிடித்தபோது கணிப்பாளர்கள் வாய் பொத்திக் கொண்டது வரலாறு. அப்படி இருக்கையில், வாய்க்கு வந்தபடியும், மனதுக்கு தோன்றியபடியும் அடித்து விடப்படும் நமது நாட்டு கருத்து கணிப்புகள், எத்தகையதாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
சரி, ஓரிரு மாதங்களில் வேஷம் கலைந்து போகுமெனில், இந்த கணிப்புகள் எல்லாம் எதற்காக?
‛வெற்றி பெறப்போகும் கட்சிக்கு ஓட்டுப் போடலாம்’ என்று ஒரு வீணாய்ப்போன கூட்டம், இந்த நாட்டில் இருக்கிறது. அவர்கள், தங்கள் முடிவை எடுப்பதற்குத்தான் இந்த கணிப்புகள் பயன்படும். எனவே தான், அரசியல் கட்சிகள், தங்களுக்கு சாதகமான கணிப்புகளை ஆதரிக்கின்றன. பாதகமான கணிப்புகளை திட்டித் தீர்க்கின்றன.
டிவிக்களைப் பொறுத்தவரை, கணிப்புகள் அனைத்தும் இருட்டுக்குள் எறியப்படும் கற்கள் போன்றவை. அதில் காயோ, பழமோ விழுந்தால், ‛நம்ம குறி அப்படி’ என்று பீலா விடலாம். காயும் இல்லை, பழமும் இல்லை என்றாலும், தங்களை சார்ந்திருக்கும் அல்லது தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிக்கு உதவி செய்தது போலிருக்கும். அவர்கள் தயவில், ஏதாவது விளம்பரங்கள் வாங்கி காசு பார்க்கலாம். இது தான், கருத்து கணிப்புகளின் பின்னணி.

பின்னூட்டங்கள்
  1. தங்கராஜ் சொல்கிறார்:

    100% உண்மை… எல்லோருமே அரசியல் வியாபாரிகள் தாங்க…

    Like

  2. chitrasundar5 சொல்கிறார்:

    கடைசியில் ஏமாறுவது பொதுமக்கள்தான் !!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s