ஆணைய உத்தரவுக்கு பயந்து யாரேனும், பணம் கொடுக்காமல் இருக்கிறார்களா? வாங்காமல் இருக்கிறார்களா? பணம் கொடுப்பதும், வாங்குவதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆணையத்தின் ஆட்டம் எல்லாம், தேர்தல் முடியும் வரை தான் என்று, எல்லோருக்கும் தெரியும். அதனால் தான், அதன் உத்தரவுகளை டிவி சேனல்கள் முதல், அரசியல் கட்சிகள், போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் வரை, யாருமே பொருட்படுத்துவதில்லை.
தேர்தல் ஆணையம் பிடுங்கிக் கொண்டிருப்பது எல்லாமே தேவையற்ற ஆணிகள் என்று அதிகாரிகள் மட்டுமல்ல, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மத்தியிலும் கருத்து நிலவுகிறது. ‛பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்; அது உங்கள் பணம்’ என்று, முன்பு விஜயகாந்த் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார்; இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலும் சாெல்ல ஆரம்பித்து விட்டார். அதையும் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
எனவே, பணம் கொடுப்பவர்கள் கொடுக்கலாம்; பொருள் கொடுப்பவர் கொடுக்கலாம்; வாங்க விருப்பம் உள்ளவர்கள், வாங்கிக் கொள்ளலாம் என்று, தானே முன்வந்து அறிவித்து விடுவது தான், ஆணையத்துக்கு கொஞ்சமாவது மரியாதையாக இருக்கும். ‛கொடுப்பதை எல்லாம் வாங்கிக் கொண்டு, உங்கள் மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள்’ என்று வேண்டுகோள் விடுப்பதே வரும்காலங்களில் சரியான முடிவாக இருக்கும். ஏதோ, அதன் மூலம் நமக்கும் கொஞ்சம் பலன் கிடைத்தது போலவும் இருக்கும்.
திருப்பணியை தொடர்கின்றேன்!
Posted: 19/04/2014 in கவிதை, கருத்து, இதழியல்குறிச்சொற்கள்:இதழியல், coimbatore, election, politics, reporter, tamilnadu
வணக்கம், பதிவுலக சொந்தங்களே!
தேர்தல் காலம்; அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகம் என்பதால் வலைப்பக்கம் வர முடியவில்லை. தொகுதிப்பக்கம் வராத எம்.பி., எம்.எல்.ஏ.,க்களையே மன்னித்து, மாலை மரியாதை செய்தனுப்பும் பாரம்பரியம் கொண்ட தமிழ் கூறும் நல்லுலகம், என்னையும் மகிழ்வுடன் ஏற்கும் என்று மனதார நம்புகிறேன். பிரசாரம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், அரசியல் தவிர்த்த பதிவுகள் போடுவது தெய்வ குற்றம் என்றஞ்சி, என் திருப்பணியை தொடர்கின்றேன். நன்றி!
குறிப்பு: நான், மோடி, ராகுல் ஆதரவாளர் அல்ல; அம்மா கட்சியும் அல்ல; அய்யன் வள்ளுவர் கட்சியும் அல்ல.
நடுநிலை என்றெல்லாம் பொய் சொல்ல விருப்பமில்லாத விமர்சகன் என்றே நீங்கள் கருதும்படி வேண்டுகிறேன்.
ஒப்புதல் வாக்குமூலம்
Posted: 16/03/2014 in கட்டுரை, கவிதை, கவிதை, கருத்து, இதழியல்குறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, cbe, coimbatore, kavithai, kovai, poem, poetry, tamil
‛கவிதை எழுதியே தீருவது’ என்று நான் முடிவெடுத்தபோது, ‛காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் பேசுவதாக வரும் டயலாக் தான் நினைவுக்கு வந்தது. ‛‛நாம எடுப்பது தான் படம். அத தமிழ்நாட்டு ஜனங்க பாத்தே தீரணும். அது அவுங்க தலையெழுத்து’’
அப்புறமென்ன, சென்னிமலை முருகன் மேல் பாரத்தைப் போட்டு, வேலையை தொடங்கியே விட்டேன். கவிதையைப் படித்த நண்பர்கள் உற்சாகம் ஊட்டினர். குறிப்பாக அலுவலக நண்பர்கள், அமோக ஆதரவு தந்தனர். நண்பர்கள் பாலா, ஜெரால்டு, லோகநாதன் ஆகியோர், முகநூலில் கவிதையை பகிர்ந்ததுடன், எனக்கே கூசும் அளவுக்கு புகழ்ந்து தள்ளி விட்டனர்.
நண்பர்களின் ஆதரவு எதிர்பார்த்தது தான். எதிர்பாராத இடங்களில் இருந்துவந்த ஆதரவு, என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டது. குறிப்பாக, வலைப்பதிவர் சித்ராசுந்தர். கவிதைகளை பாராட்டியதுடன், வலைச்சரத்தில் என்னைப்பற்றியும் அறிமுகம் செய்து வைத்தார். உண்மையிலேயே அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். வலைப்பதிவர்களுக்கு பேருதவி புரியும் திண்டுக்கல் தனபாலன் சாரும், ஒவ்வொரு கவிதைக்கும் உற்சாகம் ஊட்டி வருகிறார். இத்தகைய ஊக்குவிப்புகள்தான், தொடர்ந்து எழுதுவதற்கு துாண்டுகின்றன என்பதை கட்டாயம் சொல்லியே தீர வேண்டும்.
***
நண்பர் ஒருவர் கேட்டார், ”நீங்க எழுதுவது, மரபுக்கவிதையா, புதுக்கவிதையா, ஹைக்கூவா,” என்று.
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
”எழுதியிருப்பதை படித்து பார்த்து, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்,” என்று கூறி விட்டேன். அந்தளவு தான் நமக்கும் இலக்கியத்துக்கும் அறிமுகம்.
வழக்கமாக கவிதை, கதை எழுதுவோர் எல்லோரும், கலீல் ஜிப்ரான், ஷேக்ஸ்பியர், பாப்லோ நெருடா என்றெல்லாம் ‘அடித்து’ விடுவார்கள். நமக்கு அதெல்லாம் தெரியாது. ஷேக்ஸ்பியர் எல்லாம் கல்லூரிக் காலத்தில், டிகிரி வாங்கியாக வேண்டுமே என்பதற்காக, முட்டி மோதிப்படித்த ‛மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ்’ வரைக்கும்தான்.
பள்ளியில் படிக்கும்போதே கவிதை எழுதும் ஆர்வம் நிறைய இருந்தது. ஆர்வம் மட்டும் தான்; எழுதவெல்லாம் இல்லை. கல்லூரியிலும் அப்படித்தான். பத்திரிகை வேலையில் சேர்ந்தபிறகு, நேரமும் இருந்தது; வாய்ப்புகளும் இருந்தன. எழுதத்தான் மாயவில்லை. இப்போதும் பத்திரிகை பணி தான். ஆனால், பகல்பொழுது வெட்டியாக வீட்டில் இருப்பது, எழுத வாய்ப்பாக அமைந்துவிட்டது.
***
கடந்த சட்டமன்ற தேர்தல் நேரம். எங்கள் பத்திரிகையில் தேர்தலுக்கென தனி இணைப்பு வெளியிட்டனர். அதில், ‘கவித கவித’ என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான கவிதைகள் வெளியாகின. அதில் நான் எழுதிய மொக்கையான கவிதை ஒன்றும் வெளியாகி விட்டது. அதுவும் பெயருடன். சன்மானம் வேறு, சென்னையில் இருந்து வந்து விட்டது. அவ்வளவு தான், என் பக்கத்து சீட் ஊழியருக்கு காதில் புகை வராத குறை. ஊரெல்லாம் ஒரே புலம்பல். நான் வேறு சன்மானத்தை உயர்த்திச்சொல்லி, அவருக்கு வெறுப்பேற்றி இருந்தேன். ஒரு பத்து நாட்கள் இதை வைத்தே அவரை எல்லோரும் ஓட்டிக்கொண்டிருந்தனர். அப்போது, நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே…! அதெல்லாம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது என்பதை எழுதவும் வேண்டுமோ?
***
உப்புமா கவிதை-மழைக்கு ஒரு மிரட்டல்
Posted: 17/02/2014 in கவிதைகுறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, cbe, coimbatore, kovai, poetry, rain, tamil poetry
மக்கள் படும்பாடு
மழையின்றி பெரும்பாடு!
மாடு கன்று வைத்திருப்போர் நிலையெல்லாம் என்னாகும்?
காடெல்லாம் காய்ந்து போனால்
மான் கூட்டம் எங்கு போகும்?
மழையே மழையே!
உனக்கென்ன கேடு?
மாதம் ஒரு முறை
வா என் வீடு!
காய்ந்து வெடித்த நிலம்
கதறித்தான் அழுதிடுமா?
முப்போகம் விளைந்த பூமி
முனகித்தான் பார்க்கிறதோ?
மண்புழுக்கள்
மடிவது கண்டு
முட்செடியாய்
முளைக்கிறதோ?
கூட்டமாய் தேடி வரும்
கொக்கு குருவிக்கெல்லாம்
கட்டாந்தரை ஆன குளம்
என்ன பதில் சொல்லிடுமோ?
அன்பொழுக அழைத்திருந்தேன்! ஆடியும்தான் பார்த்து விட்டேன்! அத்தனைக்கும் பயனில்லை
அதனால் தான் கேட்கின்றேன்!
மழையே மழையே
உனக்கென்ன கேடு?
மரியாதை கெட்டு விடும்;
மாசிக்குள் பெய்து விடு!
அனுபவம் 2- புலம்பல் ஆயிரம்
Posted: 16/02/2014 in இதழியல்குறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, இதழியல், cbe, coimbatore, kovai, kovai news, News, tamil
‘நிருபர் இருக்கிறார், பேசுவதும் செய்வதும் பேப்பரில் வரும்’ என்ற எண்ணத்தில் விபரீத முடிவெடுக்கும் ஆசாமிகளிடம் இருந்து கூட்டத்தினரை காப்பாற்றவும் முடியும்.
‘பார்த்துப் பேசி விட்டு செய்தியில் பெயர் குறிப்பிடாமல் இருந்து விட்டான்’ என்ற பழிச்சொல்லில் இருந்து எளிதில் தப்புவதற்கும் வசதியாக இருக்கும்.
அரசியல் கட்சி கூட்டங்களுக்கோ, அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கோ செல்லும்போது ஏற்படும் மிகப்பெரிய பிரச்னையே, பெயர் போடுவது தான். பெயர் போடாத நிருபரை பார்த்து, அவர் பரம்பரை மீதே மண் வாரித்தூற்றும் அரசியல்வாதிகள் நாட்டில் பெருகி விட்டார்கள். ‘அவுங்கெல்லாங்குடுக்குறத நாங்குளும் தர்றோம், எங்கு பேரையும் போடுங்கப்பா’ என்று வம்பிழுப்பவர்களும் உண்டு. ‘பார்த்து பேசித் தொலைத்து விட்டோமே’ என்று பரிதாபப்பட்டு பெயரை சேர்த்து விட்டால், எடிட்டோரியலில் கும்மாங்குத்து வாங்க வேண்டியிருக்கும் என்பது தனிக்கதை.
பத்திரிகை நிருபருக்கு மரியாதை செய்கிறோம் பேர்வழி என்று பொன்னாடை போர்த்த மேடைக்கு அழைக்கும் இம்சை, சங்க கூட்டங்களில் அடிக்கடி அரங்கேறும். ‘சாப்பிடாமல் போகக்கூடாது’ என்று வம்படியாய் இழுத்துச்சென்று, நமக்கு ஆகாத, பிடிக்காத உணவுப்பண்டத்தை இலை நிறையப்போட்டு, உண்டு முடிக்கும்படி கொடுமைப்படுத்துவோரும் நாட்டில் இருக்கின்றனர். ‘போட்டோவில் என்னை மட்டும் கட் பண்ணீட்டிங்க’ என்று நமக்கு சம்மந்தம் இல்லாத பேப்பரில் வந்ததை சுட்டிக்காட்டி கண்ணீரும் கம்பலையுமாக புகார் கூறும் கூட்டம் படுத்தும்பாடு இருக்கிறதே… அப்பப்பா!
கழுதைகள் ஓட்டம்; காரணம், கவிஞர் கூட்டம்?
Posted: 08/01/2014 in கட்டுரைகுறிச்சொற்கள்:Aarumugam, animals, ayyasamy, coimbatore, domestic donkey, donkey, poet, poetry
கழுதைக்கு தெரியுமா, கற்பூர வாசனை என்பதும், ‘கழுதை கெட்டால் குட்டிச்சுவர்’ என்பதும், ‘சோம்பேறிக்கழுதை’ என்பதும், சமகால தமிழர்களின் நாவில் அன்றாடம் புழங்கும் வசவுகளில் சில.
விசாரித்தவரையில், கழுதைகளின் உரிமையாளர்களே அவற்றை சாகடித்து விட்டனர் அல்லது சாக விட்டு விட்டனர்.
உண்டு களித்திருத்தல், கவிதை!
Posted: 05/01/2014 in கவிதைகுறிச்சொற்கள்:ayyasamy, cbe, coimbatore, kavithai, kovai, love, nature, poetry, tamil
மழை வானில் மின்னல் ஒரு கவிதை!
மடை திறந்த வெள்ளம் ஒரு கவிதை!
மயிலொன்று நின்றாலே கவிதை!
மான் கூட்டம் நடந்தாலும் கவிதை!
புல்வெளியில் பனிப்போர்வை கவிதை!
பனி பொழியும் அதிகாலை கவிதை!
காலைத்துயில் எழுப்பும்
கதிரொளியும் கவிதை!
மண்ணில் மறைந்திருக்கும்
மரக்கூட்டம் கவிதை!
கண்ணில் ஒளிந்திருக்கும்
காதல் ஒரு கவிதை!
நல்ல காதலுக்காய் நாளும் காத்திருத்தல் கவிதை!
சொல்லத்தவித்திருக்கும் காதல் ஒரு கவிதை!
வெல்லமாய் இனித்திருக்கும் வாழ்வும் ஒரு கவிதை!
செல்லமாய் வந்து போகும் ஊடல் ஒரு கவிதை!
இரவு நிலவொளியில் உண்மை உரைத்திருத்தல் கவிதை!
உறவுக்கொட்டடியில் உண்டு களித்திருத்தல் கவிதை!
கூவும் குயிலோசை கவிதை!
கோவில் மணியோசை கவிதை!
காலைப்பனிப்பொழிவில் காலாற நடந்தபடி
கற்பனையில் மிதப்பதுவும் கவிதை!
கள்ளச்சிரிப்புடன்
பிள்ளை அடிப்பது கவிதை!
கண்களில் பாசம்; கருத்தினில் நேசம்
அன்னை அணைப்பதுவும் கவிதை!
பூச்சூடும் மழலை ஒரு கவிதை!
பொக்கை வாய் திறந்த சிரிப்பதுவும் கவிதை!
பூப்பூத்த மரமும் ஒரு கவிதை!
மணம் இல்லாப்பூவும் தான் கவிதை!
தனிமை ஒரு கவிதை!
தாயன்பும் கவிதை!
அழியாத நினைவுகளும் கவிதை!
அழுதழுத பிரிவுகளும் கவிதை!
மாலையும் கவிதை!
காலையும் கவிதை!
கண்ணில் காண்பதுவும் கவிதை!
காதில் கேட்பதுவும் கவிதை!
கை வலிக்க எழுதுவதா கவிதை?
கற்பனைக்கும் எட்டாத சித்திரத்தை
கண் கொண்டு எழுதுவதே கவிதை!
அடைமழையாய் பொழிந்தது மோனை!
அணை கடந்த வெள்ளமென எதுகை!
அடடா, எனக்கும் தான் வந்து விட்டதோ கவிதை!
அடைந்து விட்டேன் நானும், ஆனந்தம், பேருவகை!
Uppuma kavithaigal 6
Posted: 02/12/2013 in கவிதைகுறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, coimbatore, journalist, poetry, tamil
8-)அவசர உலகம்:p
அலாரம் வைத்து
விழிக்கும் உலகம்
ஆட்டம் ஆடி
ஓயும் உலகம்
அவதியில் அம்மா
ஆக்கிய சோறு
ஆறப்பொறுக்கும்
நேரமும் இல்லை
அனுபவித்துண்ண
வரமும் இல்லை
அப்பா இருப்பார்
அண்ணன் இருப்பான்
தம்பி இருப்பான்
தங்கையும் இருப்பாள்
தனித்தனியே
விடை கொடுக்க
தடுமாறும் அவசர உலகம்…
Uppuma kavithaigal 5
Posted: 02/12/2013 in கவிதைகுறிச்சொற்கள்:Aarumugam, arumugam, ayyasamy, coimbatore, journalist, rain
மழையல்ல… பிழை!
வெப்பச்சலனத்தால்
பொழிகிறது மழை
வெந்து தணிகிறது
வேளாண் குடிகள் உள்ளம்
பருவம் தவறிப்
பெய்தல் இயற்கை
பருவம் தோறும்
தவறுதல் தகுமோ?
திங்கள் மும்முறை
பெய்யெனப் பெய்த மழை
பொய்யென ஆனதற்கு
தெய்வமே பதில் தருமோ?
என் வீட்டு முற்றத்தில்
எதையோ தேடியது சிட்டுக்குருவி!
அழுது திரிந்தபடி
அங்குமிங்கும் ஓடியது
‘அய்யோ அய்யோ’ என்றபடி
அரற்றிப் புலம்பியது
கூடு கட்ட இடம் தேடியதோ?
குஞ்சுக்கு இரை தேடியதோ? முல்லைக்கொடி காணோம்!
முயல் ஆடிய கூண்டும் காணோம்!
ஆடு மேய்ந்த வெளியெல்லாம் அம்போன்னு கிடக்குறதே!
ஆட்டாங்கல் தண்ணியெல்லாம்
அப்படியே நிக்குறதே!
குடிக்கவே யாருமில்லையோ? குருவிக்கூட்டம் போனதெங்கே?
புல்வெளி வாசலிலே
புழு பூச்சி தின்ற குருவி
காரை வாசல் கண்டு
கத்திக்கதறியது!
‘குருவிகளே குருவிகளே’
குரல் கொடுத்துக் கூப்பிட்டது!
வருவார் யாருமில்லை
வேதனையில் நின்ற குருவி விருட்டெனவே பறந்தது
சாபம் கீபம் விட்டுடுமோ?
சந்தேகம் வந்ததிப்போ
குருவிக்கு கலரடிச்சு
காதல் பேர்ல விக்குறததும்
கறிக்கடைக்கு வறுவலுக்கு
காசுக்கு விக்குறதும்
ரொம்பவே தப்புத் தப்பு!
திருந்துங்க மக்கு மக்கா!
| For Nuclear Power, GMO, Space Research, Vaccines, S&T, the works... Unapologetically so | 💪🏿 | Supporter of the use of the brain & the indefatigable human spirit | मेरा देश बदल रहा है | (λதமிழ்.λஆங்கிலம்.λஸம்ஸ்க்ருதம்... ...λகடந்தகாலம்.λகற்பனை.ஒத்திசைவு)சிந்தனை | 🕉️ | 🛕 | 🇮🇳 | 🚩 |
மனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது
This WordPress.com site is the bee's knees
கவிதை, கருத்து, இதழியல்
My Whims And Fancies
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
Pa. Raghavan | Writerpara.com | Paper
கற்றதும் பெற்றதும் ...
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு!
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
இலக்கியத்தை மொழிகடந்து சுவாசிப்பவன்
கவிதை, கருத்து, இதழியல்
என் எண்ணங்களின் நீருற்று
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
A smile is a curve that straightens everything
வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)
Just another WordPress.com site
யாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்
சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்
Everything under the sun with a touch of humor!
http://ootynews.wordpress.com
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
காலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
நாங்களும் சமைப்போமில்ல!!!
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்