Posts Tagged ‘deepavali’

Uppuma kavithaigal 2

Posted: 29/11/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, ,

இனிக்கிறதோ இன்ப தீபாவளி!

சம்பளம், போனஸ், முன்பணம், இனாம் சகலமும் ஆங்கே வாங்கிய பிறகும் சட்டைப்பையில் காசுகள் தேடும்
சங்கடம் தானோ சாபமாய் கூடும்!

விதம் விதமாய் எதிர்பார்த்து வீணாகித்தான் போன
கனவுலக மாந்தர்க்காய்
கனிந்து வந்த விடுமுறையே!

ஒரு நாள் இருந்து
மறுநாள் வராமல்
சனிக்கிழமையில் நீயும்
சலிப்பின்றி வருவதால் தானோ
என் போன்ற பலருக்கும்
இனிக்கிறது, இந்த தீபாவளி!