‛கவிதை எழுதியே தீருவது’ என்று நான் முடிவெடுத்தபோது, ‛காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் பேசுவதாக வரும் டயலாக் தான் நினைவுக்கு வந்தது. ‛‛நாம எடுப்பது தான் படம். அத தமிழ்நாட்டு ஜனங்க பாத்தே தீரணும். அது அவுங்க தலையெழுத்து’’
அப்புறமென்ன, சென்னிமலை முருகன் மேல் பாரத்தைப் போட்டு, வேலையை தொடங்கியே விட்டேன். கவிதையைப் படித்த நண்பர்கள் உற்சாகம் ஊட்டினர். குறிப்பாக அலுவலக நண்பர்கள், அமோக ஆதரவு தந்தனர். நண்பர்கள் பாலா, ஜெரால்டு, லோகநாதன் ஆகியோர், முகநூலில் கவிதையை பகிர்ந்ததுடன், எனக்கே கூசும் அளவுக்கு புகழ்ந்து தள்ளி விட்டனர்.
நண்பர்களின் ஆதரவு எதிர்பார்த்தது தான். எதிர்பாராத இடங்களில் இருந்துவந்த ஆதரவு, என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டது. குறிப்பாக, வலைப்பதிவர் சித்ராசுந்தர். கவிதைகளை பாராட்டியதுடன், வலைச்சரத்தில் என்னைப்பற்றியும் அறிமுகம் செய்து வைத்தார். உண்மையிலேயே அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். வலைப்பதிவர்களுக்கு பேருதவி புரியும் திண்டுக்கல் தனபாலன் சாரும், ஒவ்வொரு கவிதைக்கும் உற்சாகம் ஊட்டி வருகிறார். இத்தகைய ஊக்குவிப்புகள்தான், தொடர்ந்து எழுதுவதற்கு துாண்டுகின்றன என்பதை கட்டாயம் சொல்லியே தீர வேண்டும்.
***
நண்பர் ஒருவர் கேட்டார், ”நீங்க எழுதுவது, மரபுக்கவிதையா, புதுக்கவிதையா, ஹைக்கூவா,” என்று.
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
”எழுதியிருப்பதை படித்து பார்த்து, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்,” என்று கூறி விட்டேன். அந்தளவு தான் நமக்கும் இலக்கியத்துக்கும் அறிமுகம்.
வழக்கமாக கவிதை, கதை எழுதுவோர் எல்லோரும், கலீல் ஜிப்ரான், ஷேக்ஸ்பியர், பாப்லோ நெருடா என்றெல்லாம் ‘அடித்து’ விடுவார்கள். நமக்கு அதெல்லாம் தெரியாது. ஷேக்ஸ்பியர் எல்லாம் கல்லூரிக் காலத்தில், டிகிரி வாங்கியாக வேண்டுமே என்பதற்காக, முட்டி மோதிப்படித்த ‛மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ்’ வரைக்கும்தான்.
பள்ளியில் படிக்கும்போதே கவிதை எழுதும் ஆர்வம் நிறைய இருந்தது. ஆர்வம் மட்டும் தான்; எழுதவெல்லாம் இல்லை. கல்லூரியிலும் அப்படித்தான். பத்திரிகை வேலையில் சேர்ந்தபிறகு, நேரமும் இருந்தது; வாய்ப்புகளும் இருந்தன. எழுதத்தான் மாயவில்லை. இப்போதும் பத்திரிகை பணி தான். ஆனால், பகல்பொழுது வெட்டியாக வீட்டில் இருப்பது, எழுத வாய்ப்பாக அமைந்துவிட்டது.
***
கடந்த சட்டமன்ற தேர்தல் நேரம். எங்கள் பத்திரிகையில் தேர்தலுக்கென தனி இணைப்பு வெளியிட்டனர். அதில், ‘கவித கவித’ என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான கவிதைகள் வெளியாகின. அதில் நான் எழுதிய மொக்கையான கவிதை ஒன்றும் வெளியாகி விட்டது. அதுவும் பெயருடன். சன்மானம் வேறு, சென்னையில் இருந்து வந்து விட்டது. அவ்வளவு தான், என் பக்கத்து சீட் ஊழியருக்கு காதில் புகை வராத குறை. ஊரெல்லாம் ஒரே புலம்பல். நான் வேறு சன்மானத்தை உயர்த்திச்சொல்லி, அவருக்கு வெறுப்பேற்றி இருந்தேன். ஒரு பத்து நாட்கள் இதை வைத்தே அவரை எல்லோரும் ஓட்டிக்கொண்டிருந்தனர். அப்போது, நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே…! அதெல்லாம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது என்பதை எழுதவும் வேண்டுமோ?
***
(1)அட..! என்று வியப்படைய வைத்தாலும், (2) சிந்திக்க வைத்தாலும், (3) வித்தியாசமாக இருந்தாலும் கவிதையே – இவை உங்களுக்கு முதலில் ஏற்பட்டால் வெற்றியே…
“தளத்தில் கருத்திடும் நேரம்” உட்பட ரசனை அவரவர் சூழ்நிலைகேற்ப மாறுபடும்…
தொடருங்கள்… வாழ்த்துக்கள்…
LikeLike
தொடருங்கள் நண்பரே
வாழ்த்துக்கள்
LikeLike
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் ஐயா
LikeLike
வாங்க தனபாலன் சார், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களைப்போன்றவர்களின் ஊக்குவிப்பு தான் தொடர்ந்து எழுதுவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.
LikeLike
உங்க சந்தோஷத்தில நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். குறிப்பா பக்கத்து சீட்டுல இருக்கிறவருக்கு காதுல புகைவராத குறைதான்.
LikeLike
வாங்க அருள் சார்! அடிக்கடி நம்ம பக்கம் வாங்க !
LikeLike
‘நன்றிக்கடன்’ என்ற பெரிய வார்த்தையெல்லாம் எதுக்குங்க ! எங்களையும் சிலர் அறிமுகப்படுத்தி இருக்காங்களே! அதுபோலத்தான் இதுவும்.
இந்தத் தேர்தல் கவிதைக்கும் சன்மானம் வருமா ! வந்தால் அந்தக் கவிதையுடனே பதிவிடுங்கள் !
LikeLike
மேடம்! இணையத்தில் எனக்கு நீங்கள் வழங்கிய அறிமுகம் தான், பல புதிய விஷயங்களை அறியவும், நண்பர்களை பெறவும் உதவியாக இருந்தது. அதை மறக்க முடியாது தானே?
இந்த தேர்தலுக்கும் கவிதை எழுதி அனுப்பும் திட்டம் இருக்கிறது மேடம். வருகைக்கு நன்றி!
LikeLike
எதையும் மறைக்காமல் சொல்வதால் இன்று முதல் “ஒயட் பேப்பர் அய்யாசாமி” என்று அன்புடன் அழைக்கப்படுவீர்கள்.
LikeLike