மாட்டிக்கிட்டாரு ஏட்டையா…!

Posted: 09/03/2014 in இதழியல்
குறிச்சொற்கள்:, , , , , ,
dir=”ltr”><divபோகாத பொழுதுகளை, போலீஸ் கமிஷனர் ஆபீஸ், எஸ்.பி., ஆபீஸ் மற்றும் ஸ்டேஷன்களுக்கு சென்று, அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தபடி கழிப்பது நிருபர்கள் வழக்கம். அந்த நியதிப்படி, ஒரு நாள் மதிய வேளையில் ஸ்டேஷன் சென்றேன். அப்பாவியாக கைகட்டி நின்றிருந்த நபரை, ரைட்டர் ஏட்டையா சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தார். அருகே, ஒரு எஸ்.ஐ., அதை ரசித்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார். கான்ஸ்டபிள் ஒருவரும் அடக்க முடியாமல் சிரித்தபடி இருந்தார்.

எஸ்.ஐ.,யிடம் பேச்சுக்கொடுத்தேன்.
 ”சார், என்ன மேட்டர், ஏட்டையா சூடா இருக்காரு” 
”அது ஒன்னுமில்ல சார், ரொம்ப நாளா நடந்த ஒரு தப்பு, அந்தாளு பண்ண வேலையால வெளிய வந்துடுச்சு, அதுல ஏட்டையா மாட்டிக்கிட்டாரு. போட்டு விட்டவன இப்ப பொரட்டி எடுக்குறாரு” 
”சார்… புரியுற மாதிரி சொல்லுங்க” 
”சார், ஸ்டேஷனுக்கு முன்னாடி ஒரு புகார் பெட்டி வெச்சுருக்கோம். பொதுமக்கள் ஏதாச்சும் பிரச்னைன்னா எழுதி அதுல போடுவாங்க. புகார் பெட்டியோட சாவி, ரைட்டர் ஏட்டையாகிட்ட இருக்கும். வாரம் ஒருவாட்டி பெட்டிய தெறந்து ஏதாவது பெட்டிசன் இருக்கான்னு பாக்கனும். நேத்து இந்தாளு, புகார் பெட்டிய போஸ்ட் பாக்ஸ்னு நெனச்சு, மெட்ராஸ்க்கு அனுப்புற ரெண்டு லெட்டர அதுல போட்டாம்போல. அப்புறம்தான் யாரோ சொன்னாங்களாம், அது போஸ்ட் பாக்ஸ் இல்லன்னு. அவன் நேரா வந்து ரைட்டர பாத்துருந்தா பிரச்னையில்ல. இன்ஸ்பெக்டரப் போயி பாத்து, என் லெட்டரக் குடுங்கன்னு கேட்டதுதான் இப்ப பிரச்னையே” 
”சரி சார், பொட்டிய தெறந்து லெட்டர எடுத்து தர வேண்டீது தானே” 
”எப்புடி தருவாரு? பெட்டி சாவி தொலைஞ்சு அஞ்சாறு மாசம் ஆச்சாம்! இத யாரோ இன்ஸ்பெக்டர்ட்ட வத்தி வெச்சுட்டாங்க, ஏட்டையாவுக்கு செம ஏத்து” 
”அப்புறம் என்னாச்சு” 
”இதுல வாராவாரம் பெட்டிய தெறந்ததாவும், பெட்டிசனே வர்லைன்னும், ஏட்டையா ரெஜிஸ்டர் மெயின்டெய்ன் பண்ணீருக்காரு. இப்ப பெட்டிய தெறக்குறதுக்காக பூட்டுக்காரன கூப்பிட போயிருக்காரு, இன்ஸ்பெக்டரு. பூட்டு ஒடச்சு பொட்டிய தெறந்தா, பூகம்பம் வெடிச்சுருமே! அந்த‌ பயத்துலதான் ஏட்டையா பொலம்புறாரு” 
சிரிக்க சிரிக்க சொல்லி முடித்தார் எஸ்.ஐ., 
அதற்குள், இன்ஸ்பெக்டர் பூட்டுக்காரருடன் வந்து விட்டார். எல்லோரும், பெட்டி முன் ஆஜரானோம். ஏட்டையா வியர்த்துப்போய் இருக்க‌, எஸ்.ஐ.,க்கள், கான்ஸ்டபிள்கள் நமுட்டுச்சிரிப்பு சிரித்தபடி நிற்க, பெட்டி திறக்கப்பட்டது. 
உள்ளே, இரண்டு கிலோ சேரும் அளவுக்கு பெட்டிசன்கள், தபால் கார்டுகள், விளம்பர நோட்டீஸ், மொட்டை கடிதங்கள். மாட்டுச்சாணம், கல். மண், காய்ந்த இலை தழைகள் கிடந்தன‌. காண்டம் பாக்கெட்டுகள் இரண்டும் உள்ளே கிடப்பதை பார்த்த இன்ஸ்பெக்டர் டென்ஷனாகி விட்டார். 
”யோவ், இதையெல்லாம் எதுக்குய்யா இதுல போடுறாங்க… மொதல்ல இந்தப்பொட்டிக்கு, போஸ்ட் பாக்ஸ் மாதிரியே செகப்பு பெயிண்ட் அடிச்சாம்பாருங்க, அவனச்சொல்லணும். புகார் பொட்டியும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம், தூக்கி உள்ள போடுங்க” 
கோபத்தில் சத்தம் போட்டுவிட்டு கிளம்பி விட்டார் இன்ஸ்பெக்டர். 
கடைசியில், ஏட்டையாவிடம் திட்டு வாங்கிய நபருக்கு கடிதங்கள் கையில் கிடைத்தன. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன மகிழ்ச்சியில், ஏட்டையா அவரை தனியாக அழைத்துப்போய் இப்படிச்சொன்னார். 
”யோவ்… உனக்கு வேண்டித்தான் பூட்டு ஒடைச்சுருக்குது. பூட்டுக்காசு, பூட்டுக்காரனுக்கு தரவேண்டிய காசு ரெண்டையும் குடுத்துட்டு எடத்தக்காலிபண்ணு”
பின்னூட்டங்கள்
  1. ootynews சொல்கிறார்:

    ரொம்ப நல்லாயிருக்கு சார்…. பேப்பர்ல சொல்ல முடியாத செய்திகள் வேர்டு பிரஸ்ல சொல்வது சூப்பர்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s