Uppuma kavithaigal 6

Posted: 02/12/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, , , , ,

8-)அவசர உலகம்:p

அலாரம் வைத்து
விழிக்கும் உலகம்
ஆட்டம் ஆடி
ஓயும் உலகம்
அவதியில் அம்மா
ஆக்கிய சோறு
ஆறப்பொறுக்கும்
நேரமும் இல்லை
அனுபவித்துண்ண
வரமும் இல்லை
அப்பா இருப்பார்
அண்ணன் இருப்பான்
தம்பி இருப்பான்
தங்கையும் இருப்பாள்
தனித்தனியே
விடை கொடுக்க
தடுமாறும் அவசர உலகம்…

பின்னூட்டங்கள்
  1. chitrasundar5 சொல்கிறார்:

    கவிதைகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. கவிதையின் தலைப்பை ‘க்ளிக்’ செய்வதுபோல் மாற்றுங்கள். படிப்பவருக்கு வசதியாக இருக்கும்.

    Like

  2. R Palanisamy சொல்கிறார்:

    Super Sir… Super sir…

    Like

பின்னூட்டமொன்றை இடுக