02/12/2013 க்கான தொகுப்பு

Uppuma kavithaigal 6

Posted: 02/12/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, , , , ,

8-)அவசர உலகம்:p

அலாரம் வைத்து
விழிக்கும் உலகம்
ஆட்டம் ஆடி
ஓயும் உலகம்
அவதியில் அம்மா
ஆக்கிய சோறு
ஆறப்பொறுக்கும்
நேரமும் இல்லை
அனுபவித்துண்ண
வரமும் இல்லை
அப்பா இருப்பார்
அண்ணன் இருப்பான்
தம்பி இருப்பான்
தங்கையும் இருப்பாள்
தனித்தனியே
விடை கொடுக்க
தடுமாறும் அவசர உலகம்…

Uppuma kavithaigal 5

Posted: 02/12/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, , , , ,

மழையல்ல… பிழை!

வெப்பச்சலனத்தால்
பொழிகிறது மழை
வெந்து தணிகிறது
வேளாண் குடிகள் உள்ளம்
பருவம் தவறிப்
பெய்தல் இயற்கை
பருவம் தோறும்
தவறுதல் தகுமோ?
திங்கள் மும்முறை
பெய்யெனப் பெய்த மழை
பொய்யென ஆனதற்கு
தெய்வமே பதில் தருமோ?